Sunday, 16 June 2013

ராஜபாளையம் நாய்








ராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ? ம்ம்ம்....கரக்ட், நாய் !! ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால் அது ஆள் உயரம் இருக்கும், எழுந்து நின்றால் கன்றுக்குட்டி உயரம் இருக்கும், மோப்ப சக்தி அதிகம்.  
இராஜபாளையம் நாய்களின் பூர்வீகம் ஆந்திரம். விஜயநகரப் பேரரசின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்ததும், கிருஷ்ண தேவராயரிடம் படை வீரர்களாக இருந்தவர் பிழைப்பிற்காக தென் தமிழகத்திற்கு வந்தார்கள். அப்பொழுது, அவர்கள் வேட்டைக்குப் பயன்படுத்திய நாய்களையும் தங்களுடன் அழைத்து வந்தனர். மன்னர் காலத்தில் தளபதிகளும், படை வீரர்களும் தங்கும் பகுதிக்கு "பாளையம்' என்று பெயர். ராஜாக்களிடம் பணிபுரிந்தவர்கள் தங்கிய இடம் என்பதைக் குறிக்கும் வகையில் "ராஜ பாளையம்' என்று அழைக்கப்பட்டு அதுவே இப்பொழுது ராஜபாளையம் என்று அழைக்கப்படுகிறது. ராஜபாளையம்  வகை நாய்கள் 55 பவுண்ட் எடை இருக்கும். மிகவும் வலிமையாக உடல் அமைப்பு கொண்டது. வேகமாக ஓட கூடியது. பொதுவாக வெள்ளை நிறம் அல்லது பிங்க் நிறத்தில் இந்த நாய்கள் இருக்கும், 26 இஞ்ச் உயரம் இருக்கும்.

பெட்டை நாய்க் குட்டிகள் எட்டு இருந்தால், இரண்டு ஆண் குட்டிகள் போதும். பெட்டை நாய் எட்டு மாதத்தில் சினைக்கு தயாராகிவிடும். அதே நேரம், ஆண் நாய்களை இரண்டு ஆண்டுகள் கழித்து பெட்டையுடன் சேர்ப்பதுதான் நல்லது. ஒரு நாய் சராசரியாக ஆறு குட்டிகள் வரை போடும். எட்டு மாதத்தில் 48 குட்டிகள் கிடைக்கும். பெட்டைக் குட்டி ஒன்று மூன்றாயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஆண் என்றால், நான்காயிரம் ரூபாய்.  எட்டாயிரத்தில் இருந்து பன்னிரெண்டாயிரம் வரை இன்று செல்கிறது. அதுவே சிப்பிபாறை அல்லது கன்னி நாய் வகைகள் ஏழாயிரம் முதல் விலை போகிறது.
வரவு/செலவு கணக்கு விவரங்கள்

0.5 ஏக்கரில் 12.0 மாதத்துக்கான வரவு/செலவு விவரங்கள்


இடத்தின் அளவு குத்து மதிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரவு/செலவு கணக்கு ஒரு வருடத்திற்கானது. இரண்டாம் ஆண்டிலிருந்து நாய்குட்டிகள் வாங்கிய செலவை, வரவில் வைத்துக் கொள்ளலாம்.


விவரம்
செலவு (ரூபாயில்)
வரவு (ரூபாயில்)
பெட்டை நாய்குட்டிகள் 8 X 3000
24000.0
0.0
ஆண் நாய்குட்டிகள் 2 X 4000
8000.0
0.0
இடம்,தீவனம் மற்றும் இதர செலவுகள்
62000.0
0.0
நாய்க்குட்டிகளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் ( 48 குட்டிகள் X 3000 )
0.0
144000.0

வருமானம் (வரவு - செலவு)
50000.0




பொதுவாக சிப்பிபாறை, கன்னி வகை நாய்கள் எல்லாம் வேட்டைக்கு பயன்படுபவை, ராஜபாளையம் மற்றும் கோம்பை நாய்கள் எல்லாம் வீட்டு காவலுக்கு நல்லது என்கிறார்கள். இந்த நாய்களை குட்டியில் இருக்கும்போது முப்பது அல்லது நாற்பது நாளில் விற்று விட வேண்டுமாம், இல்லையென்றால் தினமும் அதற்க்கு செலவு செய்வதால் நஷ்டம்தான் என்கிறார்.
 ராஜபாளையம் நாய் கன்னுகுட்டி உயரம், ஏறி நின்றால் நம்மை விட உயரம்

No comments:

Post a Comment